Monday, December 14, 2009

இப்படியுமிருக்கலாம். . .


தலைவரைப் போல
தானும் தோற்றமளிக்கவேண்டும்
என்ற எண்ணம் கொண்ட
தொண்டனாக இருக்கலாம்

சாத்திர சம்பிரதாய சிறையில்
சிக்குண்டுவிட்ட
சாமானியனாக இருக்கலாம்

காணிக்கையாக்கிவிட்டால்
கடவுள் கண்டிப்பாக கண் திறப்பார்
என்று கனவு காண்பவனாக இருக்கலாம்

அஞ்சுக்கும் பத்துக்கும்
சிங்கியடித்துக்கொண்டு
வாழ்க்கை வண்டி ஓட்டும்
வறுமையாளனாக இருக்கலாம்

தன் முகத்தில் இருக்கும்
சிற்சில குறைகளை
மூடிமறைக்கும்
முயற்சியாக கூட இருக்கலாம்

எது எப்படியிருந்தாலும்
தாடியோடு திரிபவர்களையெல்லாம்
தயவு செய்து
காதலில் தோல்வியடைந்தவர்களின்
கணக்கில் சேர்த்துவிடாதீர்கள்!

1 comment:

  1. தாடிக்குப் பின்னால் பல கதைகள் இருக்கலாம் அழகாக உணர்த்துகிறது உங்கள் கவிதை
    வாழ்த்துகள்

    ReplyDelete