Monday, May 31, 2010

செத்து மிதக்கும் வார்த்தை


ஏற்றிவிட்ட ஏணியை
எட்டி உதைக்கும் கால்களுண்டு

சுமக்கும் தோள்களில்
தோல் பிய்க்கும் நகங்களுண்டு

கரையேற்றும் படகின் மீது
காரிகாரித் துப்புவொருண்டு

உதவிக்குவரும் வாகனங்களில்
பாகங்களை கழற்றிக்கொண்டு
இறங்கிச்செல்வோருண்டு

துயர நேரங்களில்
துணைக்குவரும் கைகளில்
விரல் பிடுங்கிச்செல்கின்ற
விபரீத மனிதருண்டு

தினம்தினம் இதுபோன்ற
நபர்களைக் கொண்டே
நகர்த்தப்படுகிறது பெரும்பாலானோரின்
வாழ்க்கை.
இனி இவர்களின் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களையே பிரசவிக்கும்
ஏனெனில்-
நிகழ்காலக்கடலில்
செத்து மிதக்கின்றது
நன்றி என்னும் வார்த்தை.

No comments:

Post a Comment