Monday, May 31, 2010

ஏழ்மையின் ஏகாதிபத்தியம்


இருநூறு பிள்ளைகள்கொண்ட
தொடக்கப்பள்ளியில்-
ஆயா வேலை

உணவு ஊட்டுதல்
தூங்க வைத்தல்
கால் கழுவி விடல்
வாந்தி வாரி கொட்டுதல்
எல்லா வேலைகளுமே
சுகமாக தோன்ற-

பெருங்சுமையாய்
எனக்குள்ளே
கனக்கின்ற கேள்வியொன்று-
ஏழ்மையின் ஏகாதிபத்தியம்
என்னை
முதிர்கன்னியாக்கி
அம்மாவாக்கமலேயே
ஆயாவாக்கிவிட்டது எதனால்?

No comments:

Post a Comment